• Aatraamai - Ku Pa Ra | ஆற்றாமை - கு ப ரா | Tamil Stories | Tamil Audio Book
    Mar 31 2026

    கணவனின் அன்புக்கும் ஸ்பரிசத்துக்கும் ஏங்கும் ஒரு பெண் தன்னோடு ஒத்த வயது பெண்ணின் தாம்பத்திய அந்யோன்யத்தை பொருக்க முடியாமல் தவிக்கிறாள். ஆசூயைக்கு வடிகால் நிம்மதி தருமா?


    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


    #tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #Kupara #audiosintamil #tamilaudiostory

    Show more Show less
    10 mins
  • Master Medhuvadai - Kalki | மாஸ்டர் மெதுவடை - கல்கி | Tamil Stories | Tamil Audio Book
    Mar 30 2026

    அப்பாசாமி என்னும் மாஸ்டர் மெதுவடை ஒரு பெண் மேல் கொள்ளும் மையலை கல்கியின் ஹாஸ்யத்துடன் கலந்து கேளுங்கள்.

    To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


    #tamil​ #tamilaudiobooks​ #audiobooks​ #kadhaiosai​ #DeepikaArun​ #TamilStories​ #TamilAudio​ #audiosinTamil​ #tamilaudios #kalki


    Show more Show less
    18 mins
  • Nizhalaatam - Jeyamohan | Sample | நிழலாட்டம் | Tamil Audiobook | Deepika Arun
    Mar 28 2026

    ஒரு கிராமத்துப் பையனின் அப்பாவித்தனமான பார்வையில் தொடங்கும் உலகம் — ஆற்றங்கரை, பலாப்பழ மணம், புழுங்கல் நெல் வாசம், சந்திரி அக்காவின் சிரிப்பு — மெல்ல மெல்ல ஒரு பழைய, ஆழமான இருள் நோக்கி நகர்கிறது.


    ஜோசியர் தாத்தா கொண்டு வரும் செய்தி, வீட்டில் நடக்கும் அமைதியற்ற நிகழ்வுகள், மரபு சார்ந்த சடங்குகளின் கோர ஒலிகள்… எல்லாமே ஒரு குழந்தை மனதில் பதியும் நிழல்களாக மாறுகின்றன.


    பயம், ஆச்சரியம், புரியாத ரகசியங்கள் நிறைந்த ஜெயமோகனின் இந்த சிறுகதை, தீபிகா அருணின் உணர்ச்சிகரமான குரலில் உயிர்ப்பிக்கப்படுகிறது.


    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ



    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #nizhalaatam #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

    Show more Show less
    10 mins
  • Yaanai Doctor - Jeyamohan | யானை டாக்டர் | Tamil Audiobook | Deepika Arun
    Mar 26 2026

    ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

    To listen to more audiobooks

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


    #tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #yaanaidoctor #krishnamurtifoundation



    Show more Show less
    1 hr and 22 mins
  • Mohini Theevu - Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun
    Mar 25 2026

    வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'.


    #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun

    Show more Show less
    2 hrs and 2 mins
  • பகுதி 84 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும்
    Mar 26 2026

    1. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து வந்த மதங்கள்தாம் ஜைன மதமும் புத்த மதமும் என்றால் அது சரியா?

    2. சமண மதமும், ஜைன மதமும் ஒன்றா?

    3. ஜைன மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா?

    4. ஜைனத்தில் தீர்த்தங்கரர் என்பவர்தான் கடவுள் என்றோ இல்லை அவதாரம் என்றோ சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் சொன்னால் பொருந்துமா?

    5. பாரதத்தில் ஜைன மதத்தைப் பின்பற்றுவோர்கள் எத்தனை சதவீதம்? பௌத்தம் போல் ஜைனமும் பல நாடுகளில் பரவியுள்ள ஒரு மதமா?

    6. புத்த மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா?

    7. புத்த மதம் கடவுளை மறுக்கிறதா? நிர்வாணம் என்பது என்ன? படைப்பு பற்றி, ஜீவாத்மா, மறுபிறவி பற்றியெல்லாம் அம்மதம் என்ன சொல்கிறது?

    8. சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் புத்தர் ஒரு அவதாரமா?

    9. அப்படியானால், பௌத்தத்தில் புத்தருக்கு கோவில்கள் கட்டி அவரது பிரம்மாண்டமான சிலைகளை வணங்குகிறார்களே?

    10. புத்தமதம் இந்தியாவைத் தவிர வேறு எந்தெந்த நாடுகளுக்குப் பரவியது? சனாதன தர்மத்துக்கு மாற்றாய் பெரும் எழுச்சியோடு வளர்ந்த பௌத்தம், பின் கால ஓட்டத்தில் பாரதத்தில் பெரிதும் நலிவுற்றுவிட்டது ஏன்? அந்த நலிவுக்குக் காரணம் என்ன?



    ===============



    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.



    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:



    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L



    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai ##religion #jainism #buddhism

    Show more Show less
    20 mins
  • பகுதி 83 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்
    Mar 12 2026
    1. நீங்கள் இதுவரை சொல்வதைக் கேட்டால் ஒருவர் பிரபத்தி செய்துகொண்டுவிட்டால் அவருக்கு மோக்ஷம் நிச்சயம் என்பதாகத் தெரிகிறது. உண்மை அப்படி இருக்க, அவரது வாரிசு 13 நாள் ஈமக் கிரியைகளும் சிராத்தமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே? ஆனால் யாரும் செய்யாமல் விடுவதாகத் தெரியவில்லையே?2. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்த உறவினரின் அஸ்தியை எடுத்து கங்கையில் இடுவதன் மூலம் அன்னாரது ஆத்மாவுக்கு நற்கதி கிடைக்குமா?3. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சிலர் இறந்தவர்கள் கடவுளுக்கு சமம் என்கின்றனர், ஆனால் நம் வீட்டில் கல்யாணம், சிறப்பு பூஜைகள் போன்ற நிகழ்வுகளின் போது இறந்தவரின் வீட்டிற்கு போகக்கூடாது என்று ஏன் சொல்கின்றனர்? இது மூடநம்பிக்கையா? இதனை தெளிவாக விளக்க முடியுமா?4. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் எங்கே, எந்த திசையில் வைத்து வழிபாடு செய்யலாம்? பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?5. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சமீபத்தில் காலமான என் தந்தையின் ஆத்மா என்னுடனேயே இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது. அதை நான் எவ்வாறு உறுதிப் படுத்துவது? அப்படி இருந்தால் அவர் ஆத்மாவை என்னுடனேயே இருக்க வைக்க என்ன செய்யவேண்டும்? 6. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சிலர் தங்களுக்கு மரண பயம் இல்லை, சாவை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயார்; ஆனால் பொறுக்கவியலாத வலி, உடம்பு வேதனை இவற்றை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது என்கிறார்கள். இவர்களை துணிவுள்வர்கள் என்பதா, கோழைகள் என்பதா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #afterdeath...
    Show more Show less
    20 mins
  • பகுதி 82 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்
    Feb 28 2026

    1. இறந்த பெற்றவர்களுக்கு செய்யும் ஈமக் கிரியைகளும், சிராத்த சடங்குகளும் ஒரு இல்லறத்தான் கட்டாயமாக செய்யவேண்டிய கடமையா? ஆண் மகன் இல்லாத குடும்பத்தின் நிலை என்ன? பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள், உலக வாழ்க்கையைத் துறந்த சன்னியாசிகளின் நிலை என்ன?


    2. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நரகத்தில் போய் வீழ்வார்கள் என்று வேத சாஸ்திரங்கள் உண்மையிலேயே சொல்கின்றனவா?


    3. முக்தி அல்லது மோட்சத்தை அடையத் தகுதி பெற்ற ஒருவனின் மரணத்துக்குப் பிந்தைய பயணத்தைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன?


    4. இன்றைய நடப்பில் பார்த்தால் பெரும்பாலும் பிராமண சாதியினரே புரோகிதரின் உதவியோடு 13 நாள் காரியங்கள், சிராத்தம், மாசிகம், வருட முடிவில் சிராத்தம் போன்ற சடங்குகளை தீவிர ஈடுபாட்டுடன் செய்கின்றனர். மற்ற சாதியினருக்கு அவை அவசியமில்லையா?


    5. தமது வாரிசுகள் தமக்கு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் முதலான சடங்குகளை செய்யாது விட்டால், பித்ருக்கள் கோபம் கொண்டு வாரிசை சபிப்பர் என்றோ, அந்த சாபம் பிள்ளைகளின் சந்ததியினரைத் தாக்கும் என்றோ சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ளதா?




    ===============



    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.



    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:



    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L



    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #afterdeath #death

    Show more Show less
    20 mins